search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி வளர்ச்சி நாள்"

    • காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர், கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்வி வளர்ச்சியை ஊக்குப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மாணவர்களின் அணிவகுப்பில் ஊர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி , நாடகம் மற்றும் நடனம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகி கள் ராமச்சந்திரன், பால சுந்தரம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இந்த விழாவில் புலவர் குருசாமி, மேலாண்மை குழு தலைவர் வாசுகி உறுப்பி னர்கள் சசிகுமார், அங்காள ஈஸ்வரி, பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பொறியா ளர் தனபாலன், முன்னாள் மாண வர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவல ர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது.

    • காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது
    • விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பள்ளி தாளாளரும் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபருமான அருட்பணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, இணை பங்குத்தந்தை நிக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பிரேஸ்லின் மனோ வரவேற்று பேசினார்.

    காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மேல்நிலைப்பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் உபால்டு பரிசுகளை வழங்கி பேசினார். இணை பங்குதந்தை நிக்சன் உயர்நிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார். இடைநிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சகாய மல்லிகா இடைநிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் மாணவி ஏஞ்சலின் ஸ்வீட்லி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை மாணவி ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார்

    ×